கோவை: வால்பாறையில் கொரானா பரவலை தடுக்க நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை: வால்பாறையில் கொரானா பரவலை தடுக்க நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. கேரள மாநில எல்லையில் உள்ள இப்பகுதியில் கேரள மாநிலத்தினர் பலர் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான கேரள மாநிலத்தவர்கள் அடிக்கடி கேரளா சென்று வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் கொரானாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வால்பாறையில் சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் கொரானா வைரஸ் பரவலை தடுத்திட அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல, காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், கேரள எல்லை சோதனை சாவடியான மழுக்கப்பாறை சோதனைச்சாவடியில் வனத்துறையினர், காவல்துறையினர், நகராட்சி பணியாளர்கள் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சோதனைச்சாவடியில் முகாம் அமைத்து, வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கப் படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.
இதே போல, அட்டகட்டி, ஆழியார் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் மற்றும் பயணிகள் ஆய்விற்குப்பின் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு கணேஷ் தலைமையில் நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வால்பாறையிலுள்ள தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. கேரள மாநில எல்லையில் உள்ள இப்பகுதியில் கேரள மாநிலத்தினர் பலர் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான கேரள மாநிலத்தவர்கள் அடிக்கடி கேரளா சென்று வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் கொரானாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வால்பாறையில் சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறையில் கொரானா வைரஸ் பரவலை தடுத்திட அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல, காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், கேரள எல்லை சோதனை சாவடியான மழுக்கப்பாறை சோதனைச்சாவடியில் வனத்துறையினர், காவல்துறையினர், நகராட்சி பணியாளர்கள் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சோதனைச்சாவடியில் முகாம் அமைத்து, வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கப் படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.
இதே போல, அட்டகட்டி, ஆழியார் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் மற்றும் பயணிகள் ஆய்விற்குப்பின் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு கணேஷ் தலைமையில் நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வால்பாறையிலுள்ள தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.