கொரானா பரவலை தடுக்க வால்பாறை எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறையில் கொரானா பரவலை தடுக்க நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை: வால்பாறையில் கொரானா பரவலை தடுக்க நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. கேரள மாநில எல்லையில் உள்ள இப்பகுதியில் கேரள மாநிலத்தினர் பலர் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான கேரள மாநிலத்தவர்கள் அடிக்கடி கேரளா சென்று வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் கொரானாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வால்பாறையில் சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வால்பாறையில் கொரானா வைரஸ் பரவலை தடுத்திட அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல, காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. 



மேலும், கேரள எல்லை சோதனை சாவடியான மழுக்கப்பாறை சோதனைச்சாவடியில் வனத்துறையினர், காவல்துறையினர், நகராட்சி பணியாளர்கள் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். 



சோதனைச்சாவடியில் முகாம் அமைத்து, வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கப் படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.

இதே போல, அட்டகட்டி, ஆழியார் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் மற்றும் பயணிகள் ஆய்விற்குப்பின் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு கணேஷ் தலைமையில் நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வால்பாறையிலுள்ள தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...