திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் கை கழுவுவதற்கு கூட தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை, என மாநகராட்சி மீது குற்றம்சாட்டி திருப்பூர் பாரதி நகரில் வசித்து வரும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் கை கழுவுவதற்கு கூட தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை, என மாநகராட்சி மீது குற்றம்சாட்டி திருப்பூர் பாரதி நகரில் வசித்து வரும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை தண்ணீரால் கழுவ வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பாரதி நகர் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் தாராபுரம் சாலையில் காலி குடத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்று நேரத்தில் அங்கு வந்த போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி விரைவில் தண்ணீர் வர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.