கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முக கவசங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முக கவசங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் காரணமாக முக கவசங்கள் தேவை அதிகரித்து உள்ள நிலையில், அதனை தயாரிக்கும் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், அந்நிறுவனத்திடம் கியூ & கியூ என்ற நிறுவனத்தினர் முக கவசங்கள் தயாரிக்கும் இயந்திரம் வேண்டி அணுகியுள்ளனர். சென்னையை சேர்ந்த டிஐஜி (சுதாகர்) மற்றும் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்பாக முன்கூட்டியே மிரட்டி ஒரு இயந்திரத்தை கியூ & கியூ நிறுவனத்தினர் பெற்று கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மற்ற வாடிக்கையாளர்களுக்கு இயந்திரங்களை வழங்கக்கூடாது எனவும் தங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் டிஐஜி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மூலம் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, அந்நிறுவன உரிமையாளர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை இன்று அளித்தனர்.
இப்புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செளந்தரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து கடிதம் வழங்கியுள்ளார்.