கோவையில் தொடர்ந்த மத ரீதியான தாக்குதல்கள்; இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

கோவை: கோவையில் சமீப காலமாக தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையேயான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் 4 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை: கோவையில் சமீப காலமாக தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையேயான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் 4 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அமைப்பினருக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்தது. இதனால் கோவை மாநகரம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலில் இருந்தது.

இதனிடையே, கடந்த மார்ச் 4ம் தேதி இந்து முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகர போலீசார் அசாருதீன் மற்றும் நூர் முகமது ஆகிய இருவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதே போல, கடந்த 5ம் தேதி அதிகாலை இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தை தாக்கியதற்கு எதிர்வினையாக கோவை கணபதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பைச் சேர்ந்த அகில், பா.ஜ.கவை சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இதற்கான உத்தரவு சிறைத்துறைக்கு வழங்கப்பட்டது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...