கோவையில் தொடர்ந்த மத ரீதியான தாக்குதல்கள்; இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

கோவை: கோவையில் சமீப காலமாக தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையேயான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் 4 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை: கோவையில் சமீப காலமாக தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையேயான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் 4 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அமைப்பினருக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்தது. இதனால் கோவை மாநகரம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலில் இருந்தது.

இதனிடையே, கடந்த மார்ச் 4ம் தேதி இந்து முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகர போலீசார் அசாருதீன் மற்றும் நூர் முகமது ஆகிய இருவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதே போல, கடந்த 5ம் தேதி அதிகாலை இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தை தாக்கியதற்கு எதிர்வினையாக கோவை கணபதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பைச் சேர்ந்த அகில், பா.ஜ.கவை சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இதற்கான உத்தரவு சிறைத்துறைக்கு வழங்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...