கோவை அரசு மருத்துவமனையில் ஸ்வீடன் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி கொரோனா அறிகுறியுடன் அனுமதி! ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி ஒருவர் என மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை அனுப்பப்பட உள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி ஒருவர் என மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை அனுப்பப்பட உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 232 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் 45 பேர் வெளிநாட்டினர் மற்றும் 187 பேர் வெளிநாடு சென்று கோவை திரும்பியவர்கள். குறிப்பாக, வெளிநாடுகள் சென்று கோவை திரும்பியவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஸ்வீடன் சென்று கோவை மேட்டுப்பாளையம் வந்த தம்பதியருக்கு சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, பெங்களூரில் உயர்கல்வி பயின்றுவரும் 23 வயது மதிக்கத்தக்க மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து கோவை வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து சூலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது இந்த மூன்று பேரும் கொரோனா சிறப்புப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...