கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி ஒருவர் என மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை அனுப்பப்பட உள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி ஒருவர் என மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை அனுப்பப்பட உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 232 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் 45 பேர் வெளிநாட்டினர் மற்றும் 187 பேர் வெளிநாடு சென்று கோவை திரும்பியவர்கள். குறிப்பாக, வெளிநாடுகள் சென்று கோவை திரும்பியவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஸ்வீடன் சென்று கோவை மேட்டுப்பாளையம் வந்த தம்பதியருக்கு சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, பெங்களூரில் உயர்கல்வி பயின்றுவரும் 23 வயது மதிக்கத்தக்க மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து கோவை வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து சூலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது இந்த மூன்று பேரும் கொரோனா சிறப்புப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது.