கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனையில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த இரண்டு இளம் வழக்கறிஞர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனையில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த இரண்டு இளம் வழக்கறிஞர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இன்று நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு கொரோனா அறிகுறிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒரு பெண் வழக்கறிஞர் மற்றும் ஆண் வழக்கறிஞருக்கு நடைபெற்ற சோதனையில் இருவருக்கும் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு காய்ச்சல் மட்டுமே இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.