கோவையில் காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர் என அனைத்து ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

கோவை: கோவையில் சிஏஏக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போதும் வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் மீது பொய் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர் என மாவட்ட அனைத்து ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை: கோவையில் சிஏஏக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போதும் வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் மீது பொய் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர் என மாவட்ட அனைத்து ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன், ஜனநாயகத்திற்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றிய சிஏஏ, என்ஆர்சி,என்பிஆர் திட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.



தமிழகத்தை பொறுத்தவரை சிஏஏக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி அமைதியான போராட்டதை முன்னெடுத்தாக கூறினார். மேலும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி என போன்ற பலவழிகளைகளில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அறவழி போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

குறிப்பாக கோவையில் சிஏஏ க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதற்கு ஆதரவாக போராட்டத்தை கையில் எடுத்தனர் இந்து அமைப்பினர். அந்த நாள் முதல் கோவை நகரில் அசாதாரண சூழல் நிலவி வருவதாகவும் ,இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். 

மேலும் அமைதியான சூழலினை கெடுக்கும் வகையில் செயல்படுவோர்கள், குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முறையாக பின்பற்றாமல் இஸ்லாமிய இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யபடுவதாகவும் , இதுவரை வழக்குகள் இல்லாதவர்கள் மீதும் யு.ஏ.பி.ஏ வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக கூறினார். இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது கோவையில் ஒரு தரப்பினர் மீது மட்டும் காவல்துறை பாராபட்சமாக செயல்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...