கோவையில் காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர் என அனைத்து ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

கோவை: கோவையில் சிஏஏக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போதும் வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் மீது பொய் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர் என மாவட்ட அனைத்து ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை: கோவையில் சிஏஏக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போதும் வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் மீது பொய் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர் என மாவட்ட அனைத்து ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன், ஜனநாயகத்திற்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றிய சிஏஏ, என்ஆர்சி,என்பிஆர் திட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.



தமிழகத்தை பொறுத்தவரை சிஏஏக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி அமைதியான போராட்டதை முன்னெடுத்தாக கூறினார். மேலும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி என போன்ற பலவழிகளைகளில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அறவழி போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

குறிப்பாக கோவையில் சிஏஏ க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதற்கு ஆதரவாக போராட்டத்தை கையில் எடுத்தனர் இந்து அமைப்பினர். அந்த நாள் முதல் கோவை நகரில் அசாதாரண சூழல் நிலவி வருவதாகவும் ,இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். 

மேலும் அமைதியான சூழலினை கெடுக்கும் வகையில் செயல்படுவோர்கள், குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முறையாக பின்பற்றாமல் இஸ்லாமிய இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யபடுவதாகவும் , இதுவரை வழக்குகள் இல்லாதவர்கள் மீதும் யு.ஏ.பி.ஏ வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக கூறினார். இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது கோவையில் ஒரு தரப்பினர் மீது மட்டும் காவல்துறை பாராபட்சமாக செயல்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...