திருப்பூரில் முக கவசத்தை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர்: முக கவசத்தை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: முக கவசத்தை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்ற செய்முறை விளக்கத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்கள் திறந்து வைத்தார்.

இதனை அடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான அமராவதி சோதனைச்சாவடி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் எவருக்கும் கொரானா வைரஸ் வரவில்லை என்று தெரிவித்தார்.

பேருந்து நிலையங்கள், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகம் ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கோவில்கள், திரையரங்குகள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், திருப்பூர் பின்னலாடை துறையினர் இடம் ஆலோசனை மேற்கொண்டு முகக் கவசம்(MASK) தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் முக கவசத்தை அதிக விலையில் விற்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...