கொரோனா எதிரொலி: கோவையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்காணிக்க 100 படுக்கைகளுடன் சிறப்பு தனிப்பிரிவு தயார்!

கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோவை விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோவை விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு உத்தரவின் பேரில் விமான நிலையங்களில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வெளி நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்பே வெளியே அனுப்பப்படுகின்றனர். ஆனால், வைரஸ் அறிகுறிகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வைரஸ் அறிகுறிகளுடன் கோவை விமான நிலையம் வரும் நபர்கள் சுகாதாரத்துறையின் ஸ்கிரீனிங்க்கு பிறகு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதனிடையே தற்போது, கோவை விமான நிலையம் மூலம் குறிப்பிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கனவே ஆஸ்துமா, இருதய நோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தனி கண்காணிப்பு மையத்திற்கு சுகாதாரத் துறையால் அழைத்துச் செல்லப்படுவர்.



மேலும், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தேஜா சக்தி மகளிர் பொறியியல் கல்லூரி விடுதி, தற்போது சிறப்பு கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் வரும் பயணிகள் 14 நாட்கள் தங்க வைத்து கண்காணிக்கப்படுவார்கள். இதில் கொரோனோ அறிகுறி தென்பட்டால் இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்படுமெனவும் மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...