கோவையில் கொரோனா அச்சுறுத்தலால் சிறைவாசிகளை சந்திக்க அனுமதி மறுப்பு; உறவினர்கள் ஏமாற்றம்!

கோவை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக சிறைவாசிகளை சந்திக்க சிறைத்துறை நிர்வாகம் அனுமதிக்காததால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கோவை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக சிறைவாசிகளை சந்திக்க சிறைத்துறை நிர்வாகம் அனுமதிக்காததால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கோவை மத்திய சிறையில் 2000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு சிறைத்துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் நேர்காணல் கிடையாது என்ற சிறைத்துறை தகவலால் தவிப்பிற்குள்ளானர். முன்னறிவிப்பு இல்லாமல் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறிய உறவினர்கள் வாங்கி வந்த பழங்கள், துணிகள் போன்றவையும் கொடுக்கக் கூடாது என சிறைத்துறை நிர்வாகம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தனர். மதுரை உட்பட பல்வேறு வெளியூர்களில் இருந்து கோவை மத்திய சிறைக்கு கைதிகளை பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...