கொரோனா வைரஸ் எதிரொலி: கோவையில் முக கவசம் அணிந்து பணிபுரியும் காவலர்கள்!

கோவை: கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் முக கவசம் அணிந்து வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் முக கவசம் அணிந்து வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு வரும் 31ம் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்கும், பொதுமக்கள் கூடும் பல்வேறு துறைகளுக்கும் தடை விதித்துள்ளது.

இதனால் இன்று காலை முதல் கோவை மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல, வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள் என பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி உள்ளது.



இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து பணி செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.



இதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் காவல் நிலையங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் முக கவசம் அணிந்த படி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் காவல் எல்லையில் உள்ள சோதனைச் சாவடி, சிங்காநல்லூர் காவல் எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் முக கவசம் அணிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல போக்குவரத்து போலீசாரும் முக கவசம் அணிந்து சாலைகளில் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...