கோவை: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி இடம் தேர்வு செய்யப்பட்டு பிரத்தியேக வார்டு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி இடம் தேர்வு செய்யப்பட்டு பிரத்தியேக வார்டு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு உத்தரவின் பேரில், விமான நிலையங்களில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் தீவிர பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பிட்ட சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் , தென்கொரியா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், ஈரான், இத்தாலி போன்ற போன்ற 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்பே வெளியே அனுப்பப்படுகின்றனர். அதேசமயம், வைரஸ் அறிகுறிகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வைரஸ் அறிகுறிகளுடன் கோவை விமான நிலையம் வரும் நபர்கள் சுகாதாரத்துறையின் ஸ்கிரீனிங்க்கு பிறகு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது கோவை விமான நிலையம் மூலம் குறிப்பிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் கொரோனா சந்தேகத்திற்குரிய நபர்கள் விமான நிலையம் அருகில் தயாராகிவரும் பிரத்தியேக பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த தனிப்பிரிவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தனிப்பிரிவில் சந்தேகத்துக்குரிய நபர்களுக்கு, குறிப்பாக வீட்டில் வைத்து பார்க்கக் கூடிய நிலையிலுள்ள நபர்களில் நோய்வாய்ப்பட்டவர்களோ அல்லது வயது முதிர்ச்சி அடைந்தவர்களோ என பாதிக்கக் கூடிய நிலையில் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.