கோவை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு சாஹின் பாக் வழி தொடர் இருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கோவை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு சாஹின் பாக் வழி தொடர் இருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும் நம் நாடு இதை தேசிய பேரிடர் என்று அறிவித்திருப்பதாலும் நாட்டு மக்களின் உயிரையும் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து சாஹின் பாக் வழி தொடர் இருப்பு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொது மக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. நாட்டு மக்கள் மீது அக்கறையும் நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு இம்முடிவை மேற்கொண்டுள்ளது.
ஆயினும் வருங்காலத்தில் தமிழகத்தில் என்பிஆரை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்குமேயானால் நாம் தொடர் இருப்பு போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம் என்பதையும் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் என்பிஆரை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முற்படுமேயானால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும் நம் நாடு இதை தேசிய பேரிடர் என்று அறிவித்திருப்பதாலும் நாட்டு மக்களின் உயிரையும் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து சாஹின் பாக் வழி தொடர் இருப்பு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொது மக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. நாட்டு மக்கள் மீது அக்கறையும் நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு இம்முடிவை மேற்கொண்டுள்ளது.
ஆயினும் வருங்காலத்தில் தமிழகத்தில் என்பிஆரை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்குமேயானால் நாம் தொடர் இருப்பு போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம் என்பதையும் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் என்பிஆரை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முற்படுமேயானால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.