கொரோனா எதிரொலி: பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சாஹின்‌ பாக்‌ வழி தொடர்‌ இருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கோவை: கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு சாஹின்‌ பாக்‌ வழி தொடர்‌ இருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகள்‌ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கோவை: கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு சாஹின்‌ பாக்‌ வழி தொடர்‌ இருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகள்‌ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உலக அளவில்‌ கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவி வருவதாலும்‌ நம்‌ நாடு இதை தேசிய பேரிடர்‌ என்று அறிவித்திருப்பதாலும்‌ நாட்டு மக்களின்‌ உயிரையும்‌ நலனையும்‌ கருத்தில்‌ கொண்டு அனைத்து சாஹின்‌ பாக்‌ வழி தொடர்‌ இருப்பு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொது மக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகள்‌ கூட்டமைப்பு கேட்டுக்‌ கொள்கிறது. நாட்டு மக்கள்‌ மீது அக்கறையும்‌ நாட்டின்‌ நலனையும்‌ கருத்தில்‌ கொண்டு கூட்டமைப்பு இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

ஆயினும்‌ வருங்காலத்தில்‌ தமிழகத்தில்‌ என்பிஆரை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்குமேயானால்‌ நாம்‌ தொடர்‌ இருப்பு போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம்‌ என்பதையும்‌ கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில்‌ என்பிஆரை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முற்படுமேயானால்‌ அனைத்து அரசியல்‌ கட்சிகள்‌ மற்றும்‌ அமைப்புகளின்‌ ஒத்துழைப்புடன்‌ பொதுமக்கள்‌ ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...