ஆனைமலை மேல்நிலைப்பள்ளியில் 5.49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கணினி மையம் துவங்கியது

கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட சோமந்துரை சித்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் 5.49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கணினி மையத்தை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட சோமந்துரை சித்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் 5.49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கணினி மையத்தை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சோமந்துரை சித்தூர் அரசு மேல் நிலை பள்ளிக்குகணினி மையம் அமைத்து தரும்படி சட்டமன்ற உறுப்பினருக்கு பல முறை கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 



இந்நிலையில் இறுதியாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினரின் 2019 – 2020 ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.49 லட்ச ரூபாய் செலவில் கணினி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் புதிய கணினி மையத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இந்த விழாவின் போது தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...