திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனத்துடன் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனத்துடன் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அதிவிரைவு படையினர், துணை கமாண்டர் சிங்காரவேலு தலைமையில் 120 பேர் திருப்பூர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு போராட்டத்தால் அசாதாரணமான சூழல் நிலவக்கூடிய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குமரன் சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அணிவகுப்பாக வந்தனர்.

இவர்களோடு மாநகர துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில் மாநகர காவல் துறையினரும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசக்கூடிய இரண்டு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அதிவிரைவு படையினர், துணை கமாண்டர் சிங்காரவேலு தலைமையில் 120 பேர் திருப்பூர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு போராட்டத்தால் அசாதாரணமான சூழல் நிலவக்கூடிய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குமரன் சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அணிவகுப்பாக வந்தனர்.

இவர்களோடு மாநகர துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில் மாநகர காவல் துறையினரும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசக்கூடிய இரண்டு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளது.