கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அடுத்தடுத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் இவ்விரு சம்பவத்தில் ஈடுபட்டோரையும், போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அடுத்தடுத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் இவ்விரு சம்பவத்தில் ஈடுபட்டோரையும், போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த வாரம் இந்துப்முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் நஞ்சுண்டாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கோவை ராம்நகரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் இக்பால் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி சென்றனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இச்சம்பங்களால் கோவை மாநகரம் அசாதாரண சூழலுக்கு சென்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
கைது நடவடிக்கைகள்:
இந்து முன்னணி ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூர்முகம்மது என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அசாரூதின் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல, எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த இக்பால் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் இந்து முன்னணியை சேர்ந்த சதீஸ் கண்ணன் (23) மற்றும் ராகுல் (23) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு
தொடரும் இரு தரப்பினரின் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கோவை மாநகரம் முழுவதும் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும், இரவு பகல் என துப்பாக்கி ஏந்திய போலீசாரும் தீவிர ரோந்து பணியில் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, ஆங்காங்கே ஏற்படும் பரபரப்புகளை சமாளிக்க மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையில் இரவு நேரங்களில் சம்பவ இடங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சுமூக நிலை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது.
மேலும், கோவையில் மத ரீதியான தாக்குதல்கள் இனி நடைபெற்றால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த வாரம் இந்துப்முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் நஞ்சுண்டாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கோவை ராம்நகரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் இக்பால் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி சென்றனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இச்சம்பங்களால் கோவை மாநகரம் அசாதாரண சூழலுக்கு சென்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
கைது நடவடிக்கைகள்:
இந்து முன்னணி ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூர்முகம்மது என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அசாரூதின் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல, எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த இக்பால் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் இந்து முன்னணியை சேர்ந்த சதீஸ் கண்ணன் (23) மற்றும் ராகுல் (23) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு
தொடரும் இரு தரப்பினரின் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கோவை மாநகரம் முழுவதும் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும், இரவு பகல் என துப்பாக்கி ஏந்திய போலீசாரும் தீவிர ரோந்து பணியில் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, ஆங்காங்கே ஏற்படும் பரபரப்புகளை சமாளிக்க மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையில் இரவு நேரங்களில் சம்பவ இடங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சுமூக நிலை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது.
மேலும், கோவையில் மத ரீதியான தாக்குதல்கள் இனி நடைபெற்றால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.