வால்பாறையில் நிரந்தர வட்டாட்சியர் பொறுப்பேற்பு..! அலுவலர்கள் வரவேற்பு

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ராஜா வால்பாறைக்கு நிரந்தர வட்டாட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ராஜா வால்பாறைக்கு நிரந்தர வட்டாட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய வட்டாட்சியர் வெங்கடாசலம் அவர்கள் கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்று விட்டார். இருப்பினும், அவரே தொடர்ந்து வால்பாறைக்கு பொறுப்பு வட்டாட்சியராக பணிகளை கவனித்து வந்தார். இரு இடங்களில் பணியாற்றுவதால் வால்பாறை பகுதி மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய இயலாத நிலை இருந்து வந்தது.



இதையடுத்து, நிரந்தர வட்டாட்சியரை நியமிக்கும்படி வால்பாறை மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், வால்பாறை மக்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாவட்ட நிர்வாகம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ராஜா அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து வால்பாறைக்கு வட்டாட்சியராக நியமித்தது.

இந்நிலையில், வட்டாட்சியர் ராஜா வால்பாறைக்கு நிரந்தர வட்டாட்சியராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவரை அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...