வால்பாறை அருகே கடமானை வேட்டையாடிய செந்நாய்கள் கூட்டம்; பொதுமக்கள் அச்சம்

கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேயிலை தோட்டப்பகுதியில் முகாமிட்டுள்ள செந்நாய்கள் கடமானை வேட்டையாடிய நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேயிலை தோட்டப்பகுதியில் முகாமிட்டுள்ள செந்நாய்கள் கடமானை வேட்டையாடிய நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில், நேற்றிரவு தேயிலை தோட்டப்பகுதியிலிருந்து கடமான் ஒன்றினை செந்நாய்கள் துரத்தி வந்தன. செந்நாய்களிடம் இருந்து தப்பிக்க ஆற்றுக்குள் குதித்த மானை 20க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஆற்றில் பாய்ந்து கொன்று தின்றன. மற்ற மான்களின் சத்தம் கேட்டு எழுந்த மக்கள், மானை செந்நாய்கள் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குடியிருப்புகளுக்கு மிக அருகில் செந்நாய் கூட்டம் வந்துள்ளதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.



இதையடுத்து, தகவலறிந்து வந்த வனத்துறையினர், இறந்த மானை பார்வையிட்டனர். மேலும் இப்பகுதியில் செந்நாய்கள் முகாமிட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து இறந்த மானின் உடல் ஆற்றுப்பகுதியில் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு ஆற்றில் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, வனத்துறையினர் இறந்த மானின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...