திருப்பூர்: திருப்பூரில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பிரித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பிரித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார்(30) மற்றும் ஈரோட்டை சேர்ந்த சுஜாதா ஆகியோர் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கு ராமகிருட்டிணன் தலைமையில் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சுஜாதாவின் பெற்றோர்கள் சில நாட்களுக்கு முன்பு பிரேம்குமாரிடமிருந்து சுஜாதாவை பிரித்து சென்று, பணத்திற்காகதான் பிரேம்குமார் காதலித்ததாக சொல்லியதோடு அவரை அழைத்து மிரட்டி சுஜாதாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கடிதம் எழுதி வாங்கி வைத்ததாகவும், சுஜாதாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரேம்குமார் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை தடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.