கோவை: கோவையில் கொரோனா வைரஸ் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் இலவச மாஸ்க்குள் வழங்கி சமத்துவ மக்கள் கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கோவை: கோவையில் கொரோனா வைரஸ் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் இலவச மாஸ்க்குள் வழங்கி சமத்துவ மக்கள் கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் காய்ச்சல் தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. உலகளவில் 3,400 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பராவமல் தடுக்க தமிழக அரசு போர்க்கால பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோவையில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்களிடம் கொரேனா வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டு்ம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள், பாதிப்பின் தீவிரம், பரவும் விதம், தடுப்பு வழிகள், சிகிச்சை முறைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் இலவச மாஸ்க்குகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் முத்துராஜ் ,தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உக்கடம் ஷெரீப், ஆலடி ஆனந்த், முத்துப்பாண்டி, விஜயலிங்கம், சிங்கை சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.