கோவை: கோவையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் உற்பத்தி சம்பந்தப்பட்ட இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, பணி நேரத்தை தாண்டி பணியாளர்களிடம் அதிக உழைப்பை பெறுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஏசிசி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தொழிலாளர்களின் உரிமையை கேட்டால் ஆலை நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அலவன்சை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஏசிசி அண்ணா சிமெண்ட் தொழிலாளர் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் சின்னச்சாமி, ஏசிசி சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களில் 60 பேர் தான் உள்ளூர் தொழிலாளி பணிபுரிகின்றனர் என்றும் 600 பேர் வரை வெளிமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் என்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து ஆலை நிர்வாகம் புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆலை நிர்வாகம் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் உற்பத்தி சம்பந்தப்பட்ட இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, பணி நேரத்தை தாண்டி பணியாளர்களிடம் அதிக உழைப்பை பெறுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஏசிசி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தொழிலாளர்களின் உரிமையை கேட்டால் ஆலை நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அலவன்சை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஏசிசி அண்ணா சிமெண்ட் தொழிலாளர் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் சின்னச்சாமி, ஏசிசி சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களில் 60 பேர் தான் உள்ளூர் தொழிலாளி பணிபுரிகின்றனர் என்றும் 600 பேர் வரை வெளிமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் என்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து ஆலை நிர்வாகம் புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆலை நிர்வாகம் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.