கோவை: வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கோவை: வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையின் போது வடமாநில மக்கள் வண்ணப் பொடிகளை ஒருவருக்கு ஒருவர் பூசிக் கொண்டும் நடமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் வட இந்தியர்கள் வசிக்கும் பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி கொண்டும், கடவுளை வேண்டி பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடினர். இதனால் வண்ண மயமாக காட்சி அளித்ததோடு ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடினர்.

மேலும், கோவையில் வட இந்தியர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்தியர்களும் தங்களுடன் சேர்ந்து இந்த போலி பண்டிகையை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இதனால் தங்களிடையே மாநிலங்களை தாண்டி நல்ல நட்பு மலர்கிறது என்றும் ஹோலி பண்டிகையானது உலகமெங்கும் பரவி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.


வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையின் போது வடமாநில மக்கள் வண்ணப் பொடிகளை ஒருவருக்கு ஒருவர் பூசிக் கொண்டும் நடமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் வட இந்தியர்கள் வசிக்கும் பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி கொண்டும், கடவுளை வேண்டி பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடினர். இதனால் வண்ண மயமாக காட்சி அளித்ததோடு ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடினர்.

மேலும், கோவையில் வட இந்தியர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்தியர்களும் தங்களுடன் சேர்ந்து இந்த போலி பண்டிகையை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இதனால் தங்களிடையே மாநிலங்களை தாண்டி நல்ல நட்பு மலர்கிறது என்றும் ஹோலி பண்டிகையானது உலகமெங்கும் பரவி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
