கோவை: பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிப்பறையை சுத்தம் செய்ய கூறியதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த நிலையில், தற்போது நரசிம்மநாய்க்கன் பாளையம் புதிப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு அளித்து இருந்ததாகவும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளாமல் கண்துடைப்பாக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்த பள்ளி ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிப்பறையை சுத்தம் செய்ய கூறியதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த நிலையில், தற்போது நரசிம்மநாய்க்கன் பாளையம் புதிப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் மனு அளித்து இருந்ததாகவும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளாமல் கண்துடைப்பாக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்த பள்ளி ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.