கோவையில் கிரிக்கெட் மைதானத்தை மீட்டு தரக்கோரி கிரிக்கெட் மட்டைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவையில் கிரிக்கெட் மைதானத்தை மீட்டுத் தரக்கோரி சாஸ்திரி விளையாட்டு சங்கத்தினர் மட்டைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் கிரிக்கெட் மைதானத்தை மீட்டுத் தரக்கோரி சாஸ்திரி விளையாட்டு சங்கத்தினர் மட்டைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை இரத்தினசபாபதிபுரம் பகுதியில் உள்ள சாஸ்திரி மைதானம் (பரியல் கிரவுண்ட்) என அழைக்கப்படும் இந்த மைதானத்தில் காலையும், மாலையும் ஏராளமானோர் நடைபயிற்சி, கால்பந்து, கிரிகெட் என விளையாடி வருகின்றனர். இந்த மைதானத்தின் முன்புறம் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.



மேலும், மைதானத்தின் உட்புறம் தனியார் டென்னிஸ் பயிற்சியும் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு தற்காலிகமாக 36 குடிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது. காலை, மாலை என தினமும் கிரிக்கெட் விளையாட வந்து செல்லும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று 300க்கும் மேற்பட்டோர் அங்கு விளையாட வருவதால் மைதானம் நிரம்பி இருக்கும்.

தற்காலிகமாக இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிசைகளில் குடியேறுபவர்களின் குழந்தைகளுக்கு விளையாடும் போது அடிபட வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் எனவும், இந்த மைதானத்தை விளையாட்டிற்கு மட்டுமே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிரிக்கெட் மட்டைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் இது குறித்து முதல்வர் அவர்களின் பார்வைக்கு நகல் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...