திருப்பூர்: இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெண்கள் முடியை தானமாக வழங்கினர்.
திருப்பூர்: இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெண்கள் முடியை தானமாக வழங்கினர்.
ரோட்டரி கிளப் ஆஃ திருப்பூர் எவரெஸ்ட் (Rotary Club of Tirupur Everest) சார்பில் நடத்தப்பட்ட புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டியை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வீரபாண்டி வரையில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டியில் சிறுவர்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டிகளின் முடிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க ஏராளமானோர் பெண்கள் தங்கள் முடியை தானமாக கொடுத்தனர்.