கோவை: கோவையில் இந்து முன்னணி மற்றும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நடத்தும் கடையடைப்பினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தவிர்க்க அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவையில் இந்து முன்னணி மற்றும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நடத்தும் கடையடைப்பினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தவிர்க்க அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்து முன்னணியின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் நஞ்சுண்டாபுரம் அருகே வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டபடி நடைபெற்று வருகிறது.
அதேபோல, கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்தும், மேலும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆட்டோ ஓட்டுநர் முகமது கனி தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்ட அறிவிப்பால் உக்கடம் மீன் மார்க்கெட், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், டவுன்ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி,புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனை வெளியே அமர்ந்திருக்கும் ஆதரவற்றோர், ஏழை எளிய நோயாளிகள், பலதரப்பட்ட பொதுமக்கள் என உணவுகள் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை தடுக்கும் நோக்கில் அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பினர் 5 ஆயிரம் உணவு பொட்டலங்களை தயாரித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக கோவை அரசு மருத்துவமனை பின்புறம் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலைய சுற்று வட்டாரம், உக்கடம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வழங்க உள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் நஞ்சுண்டாபுரம் அருகே வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டபடி நடைபெற்று வருகிறது.
அதேபோல, கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்தும், மேலும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆட்டோ ஓட்டுநர் முகமது கனி தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்ட அறிவிப்பால் உக்கடம் மீன் மார்க்கெட், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், டவுன்ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி,புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனை வெளியே அமர்ந்திருக்கும் ஆதரவற்றோர், ஏழை எளிய நோயாளிகள், பலதரப்பட்ட பொதுமக்கள் என உணவுகள் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை தடுக்கும் நோக்கில் அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பினர் 5 ஆயிரம் உணவு பொட்டலங்களை தயாரித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக கோவை அரசு மருத்துவமனை பின்புறம் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலைய சுற்று வட்டாரம், உக்கடம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வழங்க உள்ளனர்.