குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு போராட்டத்தினால் பாஜக வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது - ஹெச்.ராஜா

கோவை: குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு போராட்டத்தினால் பாஜக வாக்கு வங்கி அதிகரித்து வருவதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு அளித்து வருவதாகவும் ஆனால், கமல்ஹாசனுக்கு அச்சட்டம் குறித்த தெளிவு இல்லை எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு போராட்டத்தினால் பாஜக வாக்கு வங்கி அதிகரித்து வருவதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு அளித்து வருவதாகவும் ஆனால், கமல்ஹாசனுக்கு அச்சட்டம் குறித்த தெளிவு இல்லை எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி விவகாரத்தில் மத பதட்டத்தை ஏற்படுத்தும் விதத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்த 38 எம்.பி.க்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், எதிர்த்து வாக்களித்த தேனி எம்.பி. ரவீந்தர்நாத் தாக்கப்பட்டார் என கூறிய அவர், மதவாத தீய சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் திருப்பூரில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நீதிபதிகளை வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டியுள்ளனர் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும், பெருந்துறை, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூரில் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் ஆவணங்கள் எதுவுமின்றி தங்கி இருக்கின்றனர் எனவும் வங்கதேசத்தில் இருந்து வந்து தங்கியிருப்பவர்களை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். சிஏஏவிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கூறிய ஹெச்.ராஜா, இந்து விரோதமாக பேசினால் எதிர்வினை வரத்தான் செய்யும் என்றார். அந்நியனுக்கு குடியுரிமை வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தேச விரோதமாக போராட்டத்தை தொடர்ந்தால் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு தருவார்கள் எனவும் மாவட்ட, ஒன்றிய அளவிலான திமுகவினர் தலைமை சரியில்லை என கூறி வருவதாகவும் கட்சியை விட்டு வெளியேறுவது குறித்து என்னோடு பேசி கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் தமிழக ஆட்சியை கலைப்போம் என தான் எங்கும் சொல்லவில்லை எனவும் சிலர் விஷமத்தனமாக பரப்பியுள்ளனர் என தெரிவித்த ஹெச்.ராஜா, நடிகர் ரஜினிகாந்த் சொன்ன ஏமாற்றம் பற்றி பின்னால் சொல்வதாக கூறியுள்ளார் எனவும் அது அவரது கட்சி தொடர்பானது விஷயம் எனவும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி குறித்து பேசலாம் என தெரிவித்தார்.

மேலும், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு போராட்டத்தினால் பாஜக வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது எனவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு அளிக்கிறார், ஆனால் கமல்ஹாசனுக்கு அச்சட்டம் குறித்த தெளிவு இல்லை எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...