5 நாட்கள் நடைபெறும் 124வது உதகை மலர் கண்காட்சி மே 15ம் தேதி தொடக்கம்- தாேட்டக்கலைத்துறை இயக்குநர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உதகையில் 124-வது மலர் கண்காட்சி மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உதகையில் 124-வது மலர் கண்காட்சி மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்துள்ளார்.



உதகை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தோட்டக்கலைத் துறை இயக்குநர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா, உதகையில் 124-வது மலர் கண்காட்சி மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.



இதேபோல, கோத்தகிரியில் 11வது காய்கறி கண்காட்சி மே 2, 3 ஆகிய தேதிகளிலும், 17வது ரோஜா கண்காட்சி 8, 9, 10 ஆகிய தேதிகளிலும், கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி 22, 23, 24 ஆகிய தேதியிலும், குன்னூரில் 62வது பழக் கண்காட்சி 29, 30, 31 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...