கோவை: கோவையில் நாளை நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டம் எந்தவகையிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அமைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவை: கோவையில் நாளை நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டம் எந்தவகையிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அமைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், கடந்த முறை பாஜக பிரமுகர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது இந்து முன்னணி அமைப்பினர் பொதுச்சொத்தை சேதப்படுத்தினர். மேலும் பல்வேறு வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே நாளை நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கி, இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் மேடை ஒற்றுமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் கூறுகையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் இதுபோன்ற கதவடைப்புகளுக்கு அழைப்பு தரக்கூடாது என்றும் அதுபோன்ற கதவடைப்புகளை தடுத்து பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே கோவையில் இந்து முன்னணி கட்சியினர் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை இடையுறு தராமலும் காவல்துறையினர் காக்க வேண்டும் என்பதற்காக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கோவையில் நாளை இந்து முன்னணி மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், கடந்த முறை பாஜக பிரமுகர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது இந்து முன்னணி அமைப்பினர் பொதுச்சொத்தை சேதப்படுத்தினர். மேலும் பல்வேறு வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே நாளை நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கி, இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் மேடை ஒற்றுமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் கூறுகையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் இதுபோன்ற கதவடைப்புகளுக்கு அழைப்பு தரக்கூடாது என்றும் அதுபோன்ற கதவடைப்புகளை தடுத்து பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே கோவையில் இந்து முன்னணி கட்சியினர் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை இடையுறு தராமலும் காவல்துறையினர் காக்க வேண்டும் என்பதற்காக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கோவையில் நாளை இந்து முன்னணி மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.