கோவையில் இந்து முன்னணி பிரமுகர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம்: பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; வீடியோ வெளியீடு

கோவை: கோவையில் மார்ச் 1 ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் இளைஞர் ஒருவர் கத்தியுடன் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.


கோவை: கோவையில் மார்ச் 1 ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் இளைஞர் ஒருவர் கத்தியுடன் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி அசோக் உட்பட சிலர் தலைமறைவாக இருக்கும் நிலையில் கவுண்டம்பாளையம் முருகன் நகரில் வசித்து வரும் அசோக் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் அவரது மனைவி பிரகதி, தாயார் சரஸ்வதி ஆகியோருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தி "அசோக் எங்கிருந்தாலும் விடமாட்டோம்", என அந்த இளைஞரின் மிரட்டல் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து துடியலூர் போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம்

நேற்று, மார்ச் 1 ஆம் தேதி கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அருகே ஒரு பெண் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் கேரளா பதிவு எண் கொண்ட காரும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரை ஓட்டி வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. 

இதையடுத்து பிரச்சினைக்குரிய இடத்திற்கு வந்த ஒரு தரப்பினர் காரை ஓட்டி வந்தவர்களுக்கு ஆதரவாக பேசினர். இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த பெண் தனது சகோதரர் செல்வாவிற்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் செல்வாவுடன் சம்பவ இடத்திற்கு வந்த அசோக்,ராசு, சண்முக சுந்தரம் , சச்சு, தினேஷ் மற்றும் கிரன் ஆகியோர் எதிர்தரப்பினரானா கார்த்திக், ஜெரால்ட் மற்றும் ஹரீஷ் ஆகியோரை தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் தாக்கினர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அரிவாளால் தாக்கிய 6 பேர் மீது துடியலூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம்147,148, 324,307 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்றும் தாக்குதல் நடத்திய அசோக் உட்பட சிலர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...