நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பில்லிகம்பை பகுதியில் இன்று காலை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் டிப்பர் லாரி ஏரியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பில்லிகம்பை பகுதியில் இன்று காலை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் டிப்பர் லாரி ஏரியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த பில்லிகம்பை பகுதியில் இன்று ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த லட்சுமனசாமி (22) என்பவர் கந்துவட்டி வசூல் செய்ய தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திடீரென எதிரே வந்த டிப்பர் லாரியை கண்டவுடன் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைகுலைந்து எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கியுள்ளார்.
இதனை அறியாத டிப்பர் லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் சுமார் 10 அடி தூரம் வரை சென்று லாரியை நிறுத்தி பார்த்த போது லட்சுமண சாமி தலை நசுங்கி சாலையில் கிடந்துள்ளார்.

இதனை கண்டவுடன் லாரி ஓட்டுநர் கோத்தகிரி காவல்நிலையத்துக்கு வந்து சரணடைந்தார்.
இதையடுத்து, கோத்தகிரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த பில்லிகம்பை பகுதியில் இன்று ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த லட்சுமனசாமி (22) என்பவர் கந்துவட்டி வசூல் செய்ய தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திடீரென எதிரே வந்த டிப்பர் லாரியை கண்டவுடன் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைகுலைந்து எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கியுள்ளார்.
இதனை அறியாத டிப்பர் லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் சுமார் 10 அடி தூரம் வரை சென்று லாரியை நிறுத்தி பார்த்த போது லட்சுமண சாமி தலை நசுங்கி சாலையில் கிடந்துள்ளார்.

இதனை கண்டவுடன் லாரி ஓட்டுநர் கோத்தகிரி காவல்நிலையத்துக்கு வந்து சரணடைந்தார்.
இதையடுத்து, கோத்தகிரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.