திருப்பூர்: திருப்பூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
திருப்பூர்: திருப்பூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருப்பூர் - தாராபுரம் சாலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மத்திய அரசிடம் இருந்து திருப்பூருக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க உத்தரவு பெற்றுக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், ரூ.336 கோடியில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 14ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஆய்வு பணிகள் தற்போது மேற்கொண்டுள்ளதாகவும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற உள்ளதால் தேதி மாற்றப்படுமா என்பது குறித்து ஓரிரு நாளில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.