வால்பாறையில் காயமடைந்த காட்டு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் - வனத்துறையினர்

கோவை: வால்பாறையில் காயமடைந்த காட்டு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் யானையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் காயமடைந்த காட்டு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் யானையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறை ஈட்டியார் தேயிலை தோட்டத்தில் 30 வயது பெண் யானை காயத்துடன் சுற்றிவந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையின் சிறப்பு மருத்துவர் மனோகரன் காட்டு யானையை பார்வையிட்டார்.



இதனை தொடர்ந்து, வனத்துறை மருத்துவர் மனோகரன் ஆலோசனைப்படி வால்பாறை கால் நடை மருத்துவர் மெய்யரசன் தலைமையில் வனத்துறையினர் காட்டு யானையின் காயம் ஆறுவதற்காக மாத்திரைகள், சத்து மாத்திரைகளை கரும்பு, வாழைப்பழம், அன்னாசி பழம், கொய்யா பழம், தர்ப்பூசணி மற்றும் ஆப்பிள் பழங்களில் வைத்து யானைக்கு அருகே வீசப்பட்டு வருகிறது. அதை காட்டு யானை விரும்பி சாப்பிட்டு வருகிறது.

இதன் காரணமாக காட்டு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் யானையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய வனத்துறையினர், யானை சகஜ நிலைக்கு திரும்பும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...