பிரதமரின் கவனத்திற்கு வங்கி ஊழியர்களின் பிரச்சனைகளை கொண்டு செல்ல நடவடிக்கை வேண்டும் - கோவை எம் பியிடம் கோரிக்கை மனு

கோவை: வங்கி ஊழியர்களின் நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவேண்டும் என கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் கோவை எம்பி பி.ஆர்.நடராஜனிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை: வங்கி ஊழியர்களின் நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவேண்டும் என கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் கோவை எம்பி பி.ஆர்.நடராஜனிடம் மனு அளித்துள்ளனர்.



வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அறைகூவலின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரிடமும், வங்கி ஊழியர்களின் பிரச்சனைகள் பற்றி பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்ல மனு அளிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்று கோவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜனை நேரில் சந்தித்து கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

அதில் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். வாரம் ஐந்து நாள்கள் வேலை, அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம், மேலும் ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும்.அதோடு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய ஊதிய முறையினை அமல்படுத்த வேண்டும் . ஆனால் இதுவரை கடந்த 30 மாத காலமாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே உள்ளது. எனவே வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பிரதமரின் கவனத்திற்கு எடுத்து சென்று பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில் , கோவை எம்பியிடம் மனு அளித்துள்ளோம். நிச்சயம் எங்களின் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார் ன நம்புவதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...