கோவை: குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள த.பெ.தி.கவினர் பத்து பேரை விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் அனைத்து கட்சி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள த.பெ.தி.கவினர் பத்து பேரை விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் அனைத்து கட்சி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் குறித்து உயர்வாகவும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்புகள் ரஜினியின் வீடு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதில் தபெதிகவினர் 10 பேர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து த.பெ.தி.க, எஸ்.டி.பி.ஐ, வி.சி.கே, தமிழ் புலிகள், ஏ.ஐ.சி.சி.டி.யு, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும் அதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழக அரசு உடனே இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் குறித்து உயர்வாகவும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்புகள் ரஜினியின் வீடு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதில் தபெதிகவினர் 10 பேர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து த.பெ.தி.க, எஸ்.டி.பி.ஐ, வி.சி.கே, தமிழ் புலிகள், ஏ.ஐ.சி.சி.டி.யு, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும் அதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழக அரசு உடனே இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.