வேளாண் காடுகள் திட்டம் மூலம் 100 சதவீதம் வனம் பாதுகாக்கப்பட்டு உள்ளது - வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர்

கோவை: மர தொழிற்சாலைகளுக்கு வனங்களில் இருந்து பெறப்படும் மரத்தேவைகளை வேளாண் காடுகள் திட்டம் மூலம் 100 சதவீதம் தடுக்கப்பட்டு வனம் பாதுகாக்கபட்டுள்ளதாக தமிழக வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை: மர தொழிற்சாலைகளுக்கு வனங்களில் இருந்து பெறப்படும் மரத்தேவைகளை வேளாண் காடுகள் திட்டம் மூலம் 100 சதவீதம் தடுக்கப்பட்டு வனம் பாதுகாக்கபட்டுள்ளதாக தமிழக வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் நான்காவது கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்தியாவில் உள்ள முன்னணி மரம் சார்ந்த தொழிற்சாலை நிர்வாகிகள், விவசாயிகள், வேளாண் அறிவியலாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் என கூட்டமைப்பை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் திட்டம் குறித்தும் அதில் மரம் சார்ந்த பண்ணைய முறையை வலுப்படுத்தவும், வளர்க்கப்படும் மரங்களை சந்தைப்படுத்தவும், தடிமரங்கள் வளர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் ஏற்படும் நன்மைகளையும் வேளாண் காடுகள் திட்டம் மூலம் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவரித்து பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை வேந்தர் குமார், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டம் மூலம் தொழிற்சாலைக்கு தேவையான மரங்களை விவசாயிகளே உற்பத்தி செய்வதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுவதாகவும், மேலும் அவர்களின் உற்பத்திக்கு தகுந்த விலையையும் வேளாண் கல்லூரியே பெற்று தருவதால் விவசாயிகளின் வாழ்க்கை தரமும் உயரும் என தெரிவித்த துணை வேந்தர், தொழிற்சாலைகளுக்கு வனங்களில் இருந்து பெறப்படும் மரத்தேவைகளை வேளாண் காடுகள் திட்டம் மூலம் 100 சதவீதம் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தடிமர தேவைகள் அதிகமாக உள்ளதால் அதனை வெளிநாடுகளில் இருந்தும் 80 சதவீதம் இறக்குமதி செய்யும் நிலை உள்ளதால் அதனை இங்குள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து அதனை உள்நாட்டிலேயே ஏற்படுத்த தொடர் ஆய்வு மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...