வால்பாறை வனப்பகுதியில் ஆண்யானை தாக்கி பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறை அதிகாரிகள் மூலம் தீவிர சிகிச்சை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இதில் மானாம்பள்ளி வனச்சரகத் திற்குட்பட்ட சின்னகல்லார் அணை பகுதியில் சுமார் 30 வயதான பெண் யானை ஒன்று சோர்ந்த நிலையில் சில நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது வனத்துறைக்கு தெரிய வந்துள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இதில் மானாம்பள்ளி வனச்சரகத் திற்குட்பட்ட சின்னகல்லார் அணை பகுதியில் சுமார் 30 வயதான பெண் யானை ஒன்று சோர்ந்த நிலையில் சில நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது வனத்துறைக்கு தெரிய வந்துள்ளது. 

இந்த தகவலை அறிந்தவுடன் உடல் நலம் குன்றிய பெண் யானையினை தொடர்ச்சியாக கண்காணித்துவந்தனர். இதில் பெண் யானையின் பின்புறம் மற்றும் பக்க வாட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை வனத்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டனர். 

பாதிக்கப்பட்ட பெண் யானையின் உடம்பில் உள்ள தடயங்களை வைத்து பார்த்த போது, காட்டிற்குள் ஆண் யானைக்கும் பெண் யானைக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், ஆண் யானையின் தந்ததினால் பெண் யானையை குத்தி காயப்படுத்தியிருப்பதை வனத்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டனர். யானையின் மேல் காயத்தினை ஆற்றுவதற்காகவும் சிகிச்சை அளிக்கவும் முதுமலையிலிருந்து வனத்துறையின் சிறப்பு மருத்துவர் மனோகரன், தங்கராஜ் பன்னீர் செல்வம் வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் ஆகியோர் வந்து முதலுதவி மேற்கொண்டுவருகின்றனர்.காயத்தினை ஆற்ற மாத்திரைகள், சத்து மாத்திரைகள் போன்றவற்றை வாழைப்பழத்தில் வைத்து யானைக்கு அருகே வீசியபோது அதை காட்டு யானையும் சாப்பிட்டுள்ளது. 



முதற்கட்ட சிகிச்சை அளித்ததை தொடர்ந்து வனத்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் யானையை தீவிரமாக கண்காதித்து வருகின்றனர். மேலும் யானையை சகஜ நிலைக்கு திரும்பும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...