மணல் திட்டாக காட்சியளிக்கும் சோலையார் அணை..! வன விலங்குகள் குடியிருப்புக்குள் புகும் அபாயம் - வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், கடும் வெயில் காரணமாக இயற்கை ஊற்றுகள் மறைந்து வருவதால் வன விலங்குகள் உணவு மற்றும் நீரைத்தேடி குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், கடும் வெயில் காரணமாக இயற்கை ஊற்றுகள் மறைந்து வருவதால் வன விலங்குகள் உணவு மற்றும் நீரைத்தேடி குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வால்பாறையிலுள்ள முக்கிய ஆறுகளான கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறு, புதுத்தோட்டம் ஆறுகளில் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையான சோலையார் அணை வறண்டு குட்டை போல் காட்சியளிக்கிறது.



சுமார் 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் தற்போது வெறும் 28 அடி நீரே உள்ளது. அணைக்கு நீர் வரத்து நின்றுள்ளதன் காரணமாக வால்பாறை பகுதியிலுள்ள தேயிலை தோட்டப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள் வறண்டு போயுள்ளன. இதனால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் நீரைத்தேடி மக்கள் குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேயிலை தோட்டப்பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...