கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், கடும் வெயில் காரணமாக இயற்கை ஊற்றுகள் மறைந்து வருவதால் வன விலங்குகள் உணவு மற்றும் நீரைத்தேடி குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், கடும் வெயில் காரணமாக இயற்கை ஊற்றுகள் மறைந்து வருவதால் வன விலங்குகள் உணவு மற்றும் நீரைத்தேடி குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறையிலுள்ள முக்கிய ஆறுகளான கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறு, புதுத்தோட்டம் ஆறுகளில் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையான சோலையார் அணை வறண்டு குட்டை போல் காட்சியளிக்கிறது.

சுமார் 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் தற்போது வெறும் 28 அடி நீரே உள்ளது. அணைக்கு நீர் வரத்து நின்றுள்ளதன் காரணமாக வால்பாறை பகுதியிலுள்ள தேயிலை தோட்டப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள் வறண்டு போயுள்ளன. இதனால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் நீரைத்தேடி மக்கள் குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேயிலை தோட்டப்பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வால்பாறையிலுள்ள முக்கிய ஆறுகளான கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறு, புதுத்தோட்டம் ஆறுகளில் நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையான சோலையார் அணை வறண்டு குட்டை போல் காட்சியளிக்கிறது.

சுமார் 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் தற்போது வெறும் 28 அடி நீரே உள்ளது. அணைக்கு நீர் வரத்து நின்றுள்ளதன் காரணமாக வால்பாறை பகுதியிலுள்ள தேயிலை தோட்டப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள் வறண்டு போயுள்ளன. இதனால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் நீரைத்தேடி மக்கள் குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேயிலை தோட்டப்பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.