கோவையில் கள்ள நோட்டு ரூபாய்களை தயாரித்து புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது!

கோவை: கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் மூன்று போலி 200 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் திருவள்ளுவர் நகரில் உள்ள சூர்ய குமாரின் வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

பின்னர், சூர்ய குமாரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 3 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புடைய கள்ள ரூபாய் நோட்டுகளையும், அதனை தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்த போலீசார், சூர்ய குமாரை கைது செய்தனர்.

மேலும், கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட உதவியாக இருந்த கிதார் முகமது மற்றும் மகேந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...