கோவை மாவட்டத்தில் சராசரியாக இருபது முதல் இருபத்தைந்து பாலியல் அத்துமீறல்கள் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தகவல்

கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை, பெண்கள் பாதுகாப்பு தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.


கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை, பெண்கள் பாதுகாப்பு தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். 



அதன் படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் ரீதியான புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி ஒன்றினை இன்று ஆட்சியர் கு. ராஜாமணி துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் , சமூக நலத்துறை மற்றும் காவல்துறை இணைந்து பாலியல் ரீதியாக ஏற்படும் குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். 



மேலும் புகார்கள் உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை தண்டனைக்கும் உட்படுத்திகிறோம் என தெரிவித்தார். 

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளை ஒன்றிணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திவருவதாக கூறினார். இதோடு ஆட்சியரின் தலைமைக்கு கீழ் செயல்பட்டுவரும் விசாகா கமிட்டியில், பணிகளுக்கு செல்லும் பெண்கள் அளிக்கப்படும் புகார்களுக்கும் அதிகளவில் வருகின்றது என ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக அவ்வப்போது தகவல் கிடைக்க பெறுகிறது. தற்போது அதுவும் குறைந்து உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் யார் புகார் அளித்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...