நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரேவனு கைத்தலா என்னும் பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார்(35) தந்தை பெயர் சுந்தரம். அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் ஜெயக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த தொடர்பால் அப்பெண்ணின் மகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இது குறித்து அப்போது குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது வரை கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறான், இதையடுத்து இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயக்குமாருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் ஆயுள் தண்டனையும் 3, ஆயிரம் அபராதம் ரூபாய் விதித்ததோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு சார்பில் ரூபாய் 6 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரேவனு கைத்தலா என்னும் பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார்(35) தந்தை பெயர் சுந்தரம். அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் ஜெயக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த தொடர்பால் அப்பெண்ணின் மகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இது குறித்து அப்போது குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது வரை கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறான், இதையடுத்து இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயக்குமாருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் ஆயுள் தண்டனையும் 3, ஆயிரம் அபராதம் ரூபாய் விதித்ததோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு சார்பில் ரூபாய் 6 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.