கோத்தகிரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரேவனு கைத்தலா என்னும் பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார்(35) தந்தை பெயர் சுந்தரம். அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் ஜெயக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த தொடர்பால் அப்பெண்ணின் மகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இது குறித்து அப்போது குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது வரை கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறான், இதையடுத்து இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயக்குமாருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் ஆயுள் தண்டனையும் 3, ஆயிரம் அபராதம் ரூபாய் விதித்ததோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு சார்பில் ரூபாய் 6 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். 

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...