இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: அத்திக்கடவு – அவினாசி திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: அத்திக்கடவு – அவினாசி திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு – அவினாசி திட்டம், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவாகும். இந்த திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இதற்காக, 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டசபையில் இன்று, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் நிலை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார். மேலும், மதுரவாயல் மேம்பால திட்டம் கைவிடப்படவில்லை என்று கூறிய அவர், சாலையின் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால், மேம்பால பணி நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...