ஈஷாவில்‌ கோலாகலமாக தொடங்கிய 'யக்ஷா' திருவிழா; கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ நிறுவனர்‌, பொள்ளாச்சி‌ எம்‌.பி. தொடங்கி வைத்தனர்‌

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா நேற்று (பிப்‌.18) கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ நிறுவனர்‌ கிருஷ்ணன்‌, பொள்ளாச்சி‌ தொகுதி மக்களவை உறுப்பினர்‌ சண்முகம்‌ ஆகியோர்‌ குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்‌.

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா நேற்று (பிப்‌.18) கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ நிறுவனர்‌ கிருஷ்ணன்‌, பொள்ளாச்சி‌ தொகுதி மக்களவை உறுப்பினர்‌ சண்முகம்‌ ஆகியோர்‌ குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்‌.



ஈஷாவின்‌ 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும்‌ 21-ம்‌ தேதி மிக விமர்சையாகவும்‌, பிரமாண்டமாகவும்‌ கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவின்‌ தொடக்கமாக உலகின்‌ தலைசிறந்த வயலின்‌ கலைஞர்களில்‌ ஒருவரான கலா ராம்நாத்‌ அவர்களின்‌ வயலின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நெஞ்சை வருடும்‌ அவரின்‌ மெல்லிய வயலின்‌ இசையுடன்‌,.ராம்தாஸ்‌ பால்சுலேவின்‌ தபேலா இசையும்‌ சேர்ந்து கேட்போரை மெய்‌ மறக்க செய்தது. உலகம்‌ முழுவதும்‌ இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ இந்நிகழ்ச்சியை நேரில்‌ கண்டு களித்தனர்‌.



ஹைதராபாத்‌ சகோதரர்கள்‌ என அமைக்கப்படும்‌ சேஷாச் சாரி மற்றும்‌ ராகவாச்‌ சாரி அவர்களின்‌ வாய்ப்பாட்டு நிகழ்ச்சி இன்று ஷர்மிளா பிஸ்வாஸின்‌ பாரம்பரிய ஓடிசி நடன நிகழ்ச்சி 20-ம்‌ தேதியும்‌ நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள்‌ சூர்ய குண்ட மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

கலா ராம்நாத்‌:

“சிங்கிங்‌ வயலின்‌” என அமைக்கப்படும்‌ இவர்‌ உலகன்‌ தலைசிறந்த வயலின்‌ இசை கலைஞர்களில்‌ ஒருவராக விளங்குகிறார்‌. இவரது வயலின்‌ இசை ஆல்பமான மைல்ஸ்‌ ஃபிரம்‌ இந்தியா பிராஜக்ட்‌' கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, 27 பீசஸ்‌ எனும்‌ கிராமி விருதுபெறும்‌ ஆல்பத்திலும்‌ இவரது இசையமைப்புகள்‌ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தானி இசை மேதை பண்டீட்‌ ஜஸ்ராஜ்‌ அவர்களின்‌ சீடரான கலா, தனது பேராசிரியர்‌ டி.என்‌.கிருஷ்ணன்‌ மற்றும்‌ டாக்டர்‌.என்‌. ராஜம்‌ ஆகிய இசை மேதைகளை கொண்ட பாரம்பரிய இசை குடும்பத்தில்‌ பிறந்தவர்‌.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...