கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் 'யக்ஷா' கலைத் திருவிழா நேற்று (பிப்.18) கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் சண்முகம் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் 'யக்ஷா' கலைத் திருவிழா நேற்று (பிப்.18) கோலாகலமாக தொடங்கியது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் சண்முகம் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

ஈஷாவின் 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி மிக விமர்சையாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் 'யக்ஷா' கலைத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவின் தொடக்கமாக உலகின் தலைசிறந்த வயலின் கலைஞர்களில் ஒருவரான கலா ராம்நாத் அவர்களின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நெஞ்சை வருடும் அவரின் மெல்லிய வயலின் இசையுடன்,.ராம்தாஸ் பால்சுலேவின் தபேலா இசையும் சேர்ந்து கேட்போரை மெய் மறக்க செய்தது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தனர்.

ஹைதராபாத் சகோதரர்கள் என அமைக்கப்படும் சேஷாச் சாரி மற்றும் ராகவாச் சாரி அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி இன்று ஷர்மிளா பிஸ்வாஸின் பாரம்பரிய ஓடிசி நடன நிகழ்ச்சி 20-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் சூர்ய குண்ட மண்டபம் முன்பாக தினமும் மாலை 6.50 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.
கலா ராம்நாத்:
“சிங்கிங் வயலின்” என அமைக்கப்படும் இவர் உலகன் தலைசிறந்த வயலின் இசை கலைஞர்களில் ஒருவராக விளங்குகிறார். இவரது வயலின் இசை ஆல்பமான மைல்ஸ் ஃபிரம் இந்தியா பிராஜக்ட்' கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 27 பீசஸ் எனும் கிராமி விருதுபெறும் ஆல்பத்திலும் இவரது இசையமைப்புகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தானி இசை மேதை பண்டீட் ஜஸ்ராஜ் அவர்களின் சீடரான கலா, தனது பேராசிரியர் டி.என்.கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.என். ராஜம் ஆகிய இசை மேதைகளை கொண்ட பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்தவர்.

ஈஷாவின் 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி மிக விமர்சையாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் 'யக்ஷா' கலைத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவின் தொடக்கமாக உலகின் தலைசிறந்த வயலின் கலைஞர்களில் ஒருவரான கலா ராம்நாத் அவர்களின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நெஞ்சை வருடும் அவரின் மெல்லிய வயலின் இசையுடன்,.ராம்தாஸ் பால்சுலேவின் தபேலா இசையும் சேர்ந்து கேட்போரை மெய் மறக்க செய்தது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தனர்.

ஹைதராபாத் சகோதரர்கள் என அமைக்கப்படும் சேஷாச் சாரி மற்றும் ராகவாச் சாரி அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி இன்று ஷர்மிளா பிஸ்வாஸின் பாரம்பரிய ஓடிசி நடன நிகழ்ச்சி 20-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் சூர்ய குண்ட மண்டபம் முன்பாக தினமும் மாலை 6.50 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.
கலா ராம்நாத்:
“சிங்கிங் வயலின்” என அமைக்கப்படும் இவர் உலகன் தலைசிறந்த வயலின் இசை கலைஞர்களில் ஒருவராக விளங்குகிறார். இவரது வயலின் இசை ஆல்பமான மைல்ஸ் ஃபிரம் இந்தியா பிராஜக்ட்' கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 27 பீசஸ் எனும் கிராமி விருதுபெறும் ஆல்பத்திலும் இவரது இசையமைப்புகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தானி இசை மேதை பண்டீட் ஜஸ்ராஜ் அவர்களின் சீடரான கலா, தனது பேராசிரியர் டி.என்.கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.என். ராஜம் ஆகிய இசை மேதைகளை கொண்ட பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்தவர்.