கோவை: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மன நிம்மதிக்காக பொதுமக்களிடம் கைகூப்பி யாசகம் கேட்டு அலையும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மன நிம்மதிக்காக பொதுமக்களிடம் கைகூப்பி யாசகம் கேட்டு அலையும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணம், பொருள் என ஆயிரம் இருந்தாலும் நிம்மதியைத் தேடி அலையும் கூட்டம் இவ்வுலகில் பரவலாக உள்ளது. இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் யாசகம் எடுப்பதில் தான் உணர்ந்த நிம்மதியை தொடர்ந்து கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கிம் மன நிம்மதியைத் தேடி தன் வாழ்க்கையின் பல நாட்களை செலவழித்துள்ளார். அதேபோல், பல்வேறு நாடுகளுக்கும் சுற்றி திரிந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த அவர் மன நிம்மதி வேண்டி யாசகம் எடுக்க முன் வந்தார்.

இதைத்தொடர்ந்து, கோவையில் பொது மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் யாசகம் கேட்டு பெற்று வருகிறார். மேலும், பொதுமக்கள் கொடுக்கும் பணத்தை வைத்து உணவருந்தியும் வருகிறார். ஸ்வீடன் நாட்டு தொழிலதிபர் எளிய மக்களாக யாசகம் கேட்டு உணவருந்தி வாழ்வது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.